சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.031
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற பண் - இந்தளம் (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தநாதர் கோல்வளையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=oBVEIdDfMwg |
7.030
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து பண் - நட்டராகம் (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தவீசுவரர் கோல்வளைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=NBtJgCJKwnI |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.031  
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற
பண் - இந்தளம் (திருத்தலம் கருப்பறியலூர் (தலைஞாயிறு) ; (திருத்தலம் அருள்தரு கோல்வளையம்மை உடனுறை அருள்மிகு குற்றம்பொறுத்தநாதர் திருவடிகள் போற்றி )
கல்வியில் திறம்பெற்று உயர்வதற்கு ஓத வேண்டிய பதிகம்
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள் மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக் கற்றவன் இருப்பது கருப்பறியலூரே. | [1] |
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலே கொண்டு; அணைசெய் கோலம் அது, கோள் அரவினோடும்; விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர, ஒர் அம்பால்; கண்டவன் இருப்பது கருப்பறியலூரே. | [2] |
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆகப் போதினொடு போது, மலர், கொண்டு புனைகின்ற நாதன் என, நள் இருள் முன் ஆடு, குழை தாழும் காதவன் இருப்பது கருப்பறியலூரே. | [3] |
மடம் படு மலைக்குஇறைவன்மங்கை ஒருபங்கன், உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத் தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒருகாலால் கடந்தவன், இருப்பது கருப்பறியலூரே. | [4] |
ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும் கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே. | [5] |
விண்ணவர்கள்வெற்புஅரசு பெற்ற மகள், மெய்த் தேன் பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான் எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும் கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே. | [6] |
ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர் சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத் தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக் காதினன் இருப்பது கருப்பறியலூரே. | [7] |
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கைநகர் வேந்தற்கு ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள் காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே. | [8] |
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை கரந்து, ஒர் சடைமேல் மிசை உகந்து அவளை வைத்து, நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே. | [9] |
அற்றம் மறையா அமணர், ஆதம் இலி புத்தர், சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு, குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில் கற்றென இருப்பது கருப்பறியலூரே. | [10] |
நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன், கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப் பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று, வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.030  
சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து
பண் - நட்டராகம் (திருத்தலம் கருப்பறியலூர் (தலைஞாயிறு) ; (திருத்தலம் அருள்தரு கோல்வளைநாயகியம்மை உடனுறை அருள்மிகு குற்றம்பொறுத்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம் கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவக் கண்டானை; கருப்பறியலூர், கொய்ம் மாவின் மலர்ச் சோலைக் குயில் பாட மயில் ஆடும், கொகுடிக் கோயில் எம்மானை; மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! . | [1] |
நீற்(ற்)று ஆரும் மேனியராய் நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானை, தீயானை, கதிரானை, மதியானை, கருப்பறியலூர் கூற்றானை, கூற்று உதைத்துக் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில் ஏற்றானை, மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! . | [2] |
முட்டாமே நாள்தோறும் நீர் மூழ்கி, பூப் பறித்து, மூன்று போதும் கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு, அடிச் சேர்த்தும் அந்தணர் தம் கருப்பறியலூர் கொட்டு ஆட்டுப் பாட்டு ஆகி நின்றானை, குழகனை,கொகுடிக் கோயில் எட்டு ஆன மூர்த்தியை, நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! . | [3] |
விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி, வினை போக, வேலிதோறும் கருந் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் குருந்து ஆய முள் எயிற்றுக் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில் இருந்தானை மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!. | [4] |
பொடி ஏறு திருமேனிப் பெருமானை, பொங்கு அரவக் கச்சையானை, கடி நாறும் பூம் பொய்கைக் கயல் வாளை குதி கொள்ளும் கருப்பறியலூர் கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண் செய்யும் கொகுடிக் கோயில் அடி ஏறு கழலானை, நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!. | [5] |
பொய்யாத வாய்மையால், பொடி பூசிப் போற்று இசைத்து, பூசை செய்து, கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர் தம் கருப்பறியலூர் கொய் உலாம் மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக் கோயில் ஐயனை என் மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!. | [6] |
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழியச் சிந்தை செய்மின்! கடி கொள் பூந் தடம் மண்டிக் கருமேதி கண் படுக்கும் கருப்பறியலூர் கொடி கொள் பூ நுண் இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில் அடிகளை என் மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! . | [7] |
பறையாத வல்வினைகள் பறைந்தொழிய, பல்-நாளும் பாடி ஆடி கறை ஆர்ந்த கண்டத்தன், எண்தோளன், முக்கண்ணன், கருப்பறியலூர், குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத, கொகுடிக் கோயில் உறைவானை, மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே!. | [8] |
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணாக் கங்கு ஆர்ந்த வார்சடைகள் உடையானை, விடையானை, கருப்பறியலூர் கொங்கு ஆர்ந்த பொழில்-சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக் கோயில் எம் கோனை, மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!. | [9] |
பண் தாழ் இன் இசை முரலப் பல்-நாளும் பாவித்துப் பாடி ஆடிக் கண்டார் தம் கண் குளிரும் களிக் கமுகம் பூஞ்சோலைக் கருப்பறியலூர் குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம் கூறும் கொகுடிக் கோயில் எண் தோள் எம்பெருமானை நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!. | [10] |
கலை மலிந்த தென்புலவர் கற்றோர் தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் குலை மலிந்த கோள்-தெங்கு மட்டு ஒழுகும் பூஞ்சோலை கொகுடிக் கோயில் இலை மலிந்த மழுவானை, மனத்தினால் அன்பு செய்து, இன்பம் எய்தி, மலை மலிந்த தோள் ஊரன்-வனப் பகை அப்பன்-உரைத்த வண் தமிழ்களே!. | [11] |